fbpx

பள்ளி மாணவியை தரதரவென இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்..!! அடித்து துவைத்த பொதுமக்கள்..!!

வண்டலூர் அருகே 14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே மாம்பாக்கம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று மாலை 7 மணியளவில் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வீட்டின் அருகிலுள்ள புதர் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு மாணவியிடம் 3 பேர் பேச்சு கொடுத்துள்ளனர். இதில் திடீரென ஒருவன் மாணவியின் பின்பக்கம் சென்று வாயில் துணியை வைத்து அழுத்திக்கொள்ள, மற்ற இருவரும் மாணவியை தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் மூவரும் சேர்ந்து மாணவியை மாறி மாறி பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து ஓடி வந்த மாணவி, கத்தி கூச்சலிட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் ஓடி வந்து மாணவியிடம் விசாரித்தனர். பின்னர், நடந்ததை மாணவி கூறியதும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உருட்டுக் கட்டையுடன் மூவரையும் வலைவீசி தேடியுள்ளனர். இதில், ஒரு நபரை மட்டும் பிடித்து சரமாரியாக அடித்து துவைத்தனர்.

அப்போது, அந்த நபர் செல்போன் திருட வந்ததாக உளறியுள்ளார். இதையடுத்து, தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த பொதுமக்கள், பாதிக்கப்பட்ட மாணவியை ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து, இந்த வழக்கு சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பிடித்துக்கொடுத்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Read More : வாகன ஓட்டிகளே..!! அமலுக்கு வந்த 3 முக்கிய விதிமுறைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

The youth who raped a 14-year-old schoolgirl near Vandalur was slapped by the public and handed over to the police.

Chella

Next Post

இரவில் முடிக்கு எண்ணெய் தேய்ப்பதால் இத்தனை ஆபத்தா..!! இத கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..

Thu Sep 19 , 2024
Many people apply coconut oil to their hair at night and wash it off the next morning. But do you know what happens if you do this?

You May Like