fbpx

போலீசார் கண் முன்னே தீக்குளித்த கொடூரம்…. நிலத் தகராறில் நடந்த பகீர் சம்பவம்..!

மத்திய பிரதேசம் இந்தூர் மாவட்டம் சிம்ரொல் நகரில் வசித்து வருபவர் பன்வர் சிங் (45). இவருக்கும் வேறொரு நபருக்கும் இடையே சிம்ரொல் நகரில் நிலப்பிரச்சினை இருந்தது. பன்வர்சிங் தனது ஆதரவாளர்களிடன் நேற்று பிரச்சினைக்குரிய நிலப்பகுதிக்கு சென்றார், அங்கு எதிர் தரப்பும் திரண்டதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.

அப்போது, அவ்வழியாக வந்த ரோந்து வந்த காவல்துறையினர் மோதலை தடுக்க இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது, பன்வர் சிங் திடீரென அவர் வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதில், அவர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் தீயை அணைத்து தீக்காயங்களுடன் பன்வர் சிங்கை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீக்குளித்த பன்வர் சிங் 41 சதவிகித காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அதேவேளை, இந்த சம்பவத்தின் போது சிலர் காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து, இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிலரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Rupa

Next Post

ஹிஜாப் சரியாக அணியாததால் ஈரானில் பயங்கர கலவரம் … ஏராளமான பெண்கள் ஹிஜாப்பை கழற்றியதால் கதிகலங்கியது ஈரான்….

Mon Sep 19 , 2022
ஹிஜாப் சரியாக அணியாததால் ஈரானில் தாக்கப்பட்டு இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார் . இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து  மற்ற பெண்களும் ஹிஜாப்பை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு ஹிஜாப் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது . நேற்று ஈரானைச் சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது பெண் ஒருவர் டெஹ்ரானுக்கு தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார். அவர் சரியாக […]

You May Like