தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்கிறது.
நரிக்குறவர், குருவிக்காரர் என அழைப்படுபவர்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறியுள்ளார். சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பழங்குடியினருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் நரிக்குறவர் எனப்படும் குருவிக்காரர்கள் பிரிவினருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.