fbpx

பாகிஸ்தான் தலைமை நீதிபதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பரபரப்பு ….!

பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ள சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு சமீப காலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதம் தலை தூக்கி வருவதால் சாமானிய பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

பலுசிஸ்தானின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் முகமது நூர் மெஸ்கன்ஷி இவர் ஹரன் என்ற பகுதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். முடித்துவிட்டு வெளியே வந்தபோது மசூதி வாசலிலேயே மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் படபடவென சுட்டுத்தள்ளினார்கள். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

பலுசிஸ்தான் முன்னாள் தலைமை நீதிபதி கொல்லப்பட்ட சம்பவத்தில் முதல் அப்துல் குதூஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிபதியாக சேவையாற்றியதை யாராலும்மறக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார் மேலும் குவெட்டாபார் அசோசியேசனின் தலைவர் அஜ்மல் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Next Post

இந்தி திணிப்பு பற்றி பேசும் உதயநிதி ? இந்தி படத்தை விநியோகிக்கலாமா? அண்ணாமலை காட்டம் !

Sat Oct 15 , 2022
இந்தி திணிப்பு பற்றி பேசி வரும் உதயநிதி ஸ்டாலின் எதற்காக இந்தி படத்தை விநியோகிக்கின்றார் என்று தமிழக பா.ஜ . தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், திமுக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரும்போது எல்லாம், இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளும். 1965ல் இருந்து இதனை தமிழ்நாட்டில் பார்த்து வருகிறோம். இத்தனை ஆண்டுகளாக திமுக செய்த சாதனை, தமிழ்நாட்டில் […]
பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அண்ணாமலை..? புதிய தலைவர் இவர்தானாம்..!!

You May Like