fbpx

69 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்…! தலைமை நீதிபதி அதிரடி நடவடிக்கை…!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, 69 மாவட்ட நீதிபதிகளை பல்வேறு பதவிகளில் வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்தும், 17 மூத்த சிவில் நீதிபதிகளை மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு அளித்து உத்தரவிட்டுள்ளார்.

அந்த பட்டியலில் தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் இடமாற்றம் செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இப்போது உயர் நீதிமன்றத்தின் (விஜிலென்ஸ்) பதிவாளராக உள்ளார். அதேபோல சென்னை, சிட்டி சிவில் நீதிமன்றத்தின் முதல் கூடுதல் நீதிபதியாக இருந்த டி.லிங்கேஸ்வரன், இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.

எம் சாய் சரவணன், பதிவாளர் (விஜிலென்ஸ்) உயர்நீதிமன்றம், இடமாற்றம் செய்யப்பட்டு இப்போது திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதியாக உள்ளார். அதேபோல், பல மூத்த சிவில் நீதிபதிகள் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும் திருப்பூர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வி புகழேந்தி, சேலம், மகளிர் நீதிமன்றம் அமர்வு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தேன்கனிக்கோட்டை துணை நீதிபதியாக இருந்த கலைவாணி, சேலம் சிறப்பு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ராணிப்பேட்டை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பிரபாவதி, ஒன்பதாவது கூடுதல் நீதிபதியாக (சிபிஐ வழக்குகள்) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Vignesh

Next Post

ராட்வைலர் உள்ளிட்ட 23 வகை நாய் இனங்களுக்கு தடை - நாய் வளர்ப்போருக்கு புதிய ரூல்ஸ் அறிவிப்பு

Fri May 10 , 2024
தமிழ்நாட்டில் ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்களை இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாடுகளும் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் வளர்ப்பு பிராணியாக இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண், […]

You May Like