fbpx

“ ஆளுநரை ஒருமையில் பேசியதற்காக முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்..” பாஜக செயற்குழுவில் தீர்மானம்..

பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது.. தமிழக பாஜக தலைவர் அண்னாமலை, மூத்த தலைவர்கள் ஹெச், ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.. வேறு யாருக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. குறிப்பாக சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக அராஜகம் நடந்ததாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும் ஆளுநரை ஒருமையில் பேசியதற்காக முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.. கட்சியின் வளர்ச்சிக்காக நிதி சேர்ப்பது, பூத் கமிட்டியை வலுப்படுத்துவது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

அதே போல் ராமர் பாலம் பாதிக்கப்படாமல் சேது கால்வாய் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தையும் பாஜக நிறைவேற்றி உள்ளது.. மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14-ம் தேதி திருச்செந்தூரில் தனது நடைபயணத்தை தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

ஓவர்நைட்டில் கோடீஸ்வரரான 88 வயது முதியவர்.. லாட்டரியில் அடித்த ரூ.5 கோடி ஜாக்பாட்...

Fri Jan 20 , 2023
பஞ்சாப் மாநிலத்தில் 88 வயதான மஹந்த் துவாரகா தாஸ் என்ற முதியவருக்கு ரூ.5 கோடி லாட்டரி பரிசு கிடைத்துள்ளது.. மஹந்த் துவாரகா தாஸ் தனது 13-வது வயதில், 1947-ம் ஆண்டு தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்தார். தற்போது சண்டிகரில் உள்ள டெரபஸ்ஸி என்ற பகுதியில் வசித்து வருகிறார்.. சாதாரண குடும்ப பின்னணியை கொண்ட அவர் அடிக்கடி லாட்டரி சீட்டுகளை வாங்கும் பழக்கம் கொண்டவர்.. அந்த வகையில் அவர் சமீபத்தில் […]

You May Like