பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.
2023-ம் ஆண்டு பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் கூடிய ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1000/-ரொக்கப்பணம் பொங்கல் பரிசாக வழங்க தமிழ்நாடு அரசால் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரிசி பெறும் குடும்ப அட்டைகள் மற்றும் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன்கள் 3 முதல் 8-ம் தேதி வரை குடும்ப அட்டை எண்ணிக்கையின் அடிப்படையில் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வந்தது. குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு முன்கூட்டியே டோக்கன் கொடுக்கப்பட்டது.
பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற இன்று தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடங்குகிறது.