fbpx

குப்பை கிடங்கில் தோண்ட தோண்ட கிடைத்த சடலங்கள்..! மனைவி உட்பட 42 பெண்களை கொன்ற சைக்கோ..!

கென்யாவில், மனைவி உட்பட 42 பெண்களை ஒருவர் கொடூரமாக கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள குப்பை கிடங்கு ஒன்றில், தோண்ட தோண்ட தொடர்ச்சியாக பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்த கொடூர கொலை குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது, பாதிப்பக்கப்பட்ட ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட செல்போனை போலீசார் சோதனை செய்ததில் காலின்ஸ் ஜூமைசி கலுஷா என்ற 33 வயது நபரின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், கொலைகள் குறித்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

கடந்த 2022ம் ஆண்டு முதல் தற்போது வரை கிட்டதட்ட 42 பெண்களை இவர் கொன்று புதைத்ததாகவும், அதில் முதலாவது கொலை செய்தது தன் மனைவியை என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். எதற்காக இத்தனை பெண்களை கொலை செய்தார் என தெரிவிக்காததால், அந்த சைக்கோ நபரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

readmore…. சென்னை : ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம்..!!

English Summary

The corpses found in the garbage dump..! Psycho who killed 42 women including his wife..!

Next Post

கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்..!! 16 பேர் மாயம்!! 13 இந்தியர்களின் நிலமை என்ன?

Wed Jul 17 , 2024
13 Indians Among 16 Crew Members Missing After Oil Tanker Capsizes Off Oman

You May Like