fbpx

TNPSC-க்கு விண்ணப்பித்த நபர்களின் கவனத்திற்கு… தேர்வு தேதியில் அதிரடி மாற்றம் செய்து அறிவிப்பு…!

ஐஏஎஸ், ஐபிஎஸ், IFS அலுவலர்களுக்கான தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு அரசுப்பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், IFS அலுவலர்களுக்கு அரையாண்டு மற்றும் மொழித்தேர்வு அக்டோபர் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையும், 20-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இந்தத்தேர்வுகள் நடைபெறும் தேதிகள் மாற்றம் செய்யப்படுகின்றன. இவர்களுக்கான எழுத்துத்தேர்வு வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மற்றும் 10-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய கால அட்டவணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை...! 19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் கணிப்பு...!

Fri Sep 16 , 2022
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது […]

You May Like