ஐஏஎஸ், ஐபிஎஸ், IFS அலுவலர்களுக்கான தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு அரசுப்பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், IFS அலுவலர்களுக்கு அரையாண்டு மற்றும் மொழித்தேர்வு அக்டோபர் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையும், 20-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இந்தத்தேர்வுகள் நடைபெறும் தேதிகள் மாற்றம் செய்யப்படுகின்றன. இவர்களுக்கான எழுத்துத்தேர்வு வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மற்றும் 10-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய கால அட்டவணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.