fbpx

சொத்துக் கொடுக்காத மாமியாரை… கொடூரமாக கத்தியால் குத்தி கொன்ற மருமகள்… கைது..!

போளூர் அருகே புலிவானந்தல் கிராமத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சமுதாய கூடத்தில் தூங்கிக்கொண்டிருந்த காசியம்மாள் (85) என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். காசியம்மாளின் கணவர் மற்றும் இரண்டு மகன்கள் ஏற்கனவே இறந்து விட்டனர். மூன்றாவது மகன் சின்ன பையன் காசியம்மாளை பார்த்துக் கொண்டார். காசியம்மாளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இவர் இளைய மகன் சின்ன பையன் வீட்டில் சாப்பிட்டு விட்டு அருகில் இருக்கும் சமுதாய கூடத்தில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சமுதாய கூடத்தில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மேலும் அவர் அணிந்திருந்த கம்மல் மற்றும் அவர் வைத்திருந்த ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கொலையாளியை கண்டுபிடிக்க மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்திலிருந்து மோப்பம் பிடித்து ஓடியது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். சப் இன்ஸ்பெக்டர் குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில் மூத்த மருமகளான செல்வம் மனைவி தேவகி (50) மீது இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாசுக்கு சந்தேகம் உண்டானது. அவர் கொம்மனந்தல் பேருந்து நிலையம் அருகே இருப்பது தெரிய வந்தது உடனே இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று தேவகியை பிடித்தனர்.

விசாரணையில் தேவகி மாமியார் காசியம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தேவகிக்கு நரேஷ், சுரேஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சுரேஷ் உள்ளூரில் கூலி வேலை செய்து வருகிறார். நரேஷ் ஆந்திர மாநிலம் நெல்லூரில் கூலி வேலை செய்து வருகிறார். அவருக்கு 4 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. கடனை அடைக்க வேண்டும் எனவே மாமியார் காசியம்மாளிடம் இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்தை மூன்று பாகங்களாக பிரித்து கொடுக்க தேவகி கேட்டு வந்தார்.

ஆனால் மாமியார் காசியம்மாள் இரண்டு ஏக்கர் நிலத்தை இளைய மகன் சின்ன பையனுக்கு தான் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டார். இதனால் மாமியார் காசியம்மாளை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக காவல்துறையினரிடம் தேவகி தெரிவித்தார். இதை தொடர்ந்து தேவகியை காவல்துறையினர் கைது செய்து போளூர் ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.‌ பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Baskar

Next Post

ஹோட்டல் அறையில் நிர்வாணமாக கிடந்த காதலியின் சடலம்..! காதலன் சொன்ன திடுக்கிடும் தகவல்..!

Tue Sep 6 , 2022
ஹோட்டல் அறையில் இருந்து காதலன் வெளியே சென்ற நிலையில், போலீசார் அறையின் கதவை திறந்து பார்த்தபோது காதலி ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹரலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அபூர்வா ஷெட்டி (21). அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் இவரும், ஹின்கல் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். அபூர்வா வீட்டிற்கும் கல்லூரிக்கும் நீண்ட தூரம் என்பதால், […]

You May Like