fbpx

காதலியின் ஆபாச படத்தை இணையத்தில் பதிவேற்றிய மருத்துவர்… நண்பர்களுடன் சேர்ந்து போட்டு தள்ளிய காதலி..!

சென்னையை சேர்ந்தவர் விகாஷ். இவர், உக்ரைன் நாட்டுக்கு சென்று மருத்துவம் படித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் மருத்துவராக அவர் பணியாற்றினார். மேலும் பெங்களூருவுக்கு மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்காக விகாஷ் சென்றார். இதற்கிடையில், கடந்த 9-ஆம் தேதி பெங்களூரு பேகூர் காவல எல்லைக்கு உட்பட்ட மைகோ லே-அவுட் 17-வது கிராசில் இருக்கும் காதலி வீட்டில் கோமா நிலையில் இருந்த விகாஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விகாஷ் உயிரிழந்தார். இதுபற்றி பேகூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விகாசை, அவரது காதலி மற்றும் நண்பர்கள் கொலை செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், விகாசை கொலை செய்ததாக மைகோ லே-அவுட்டை சேர்ந்த பிரதிஷா, அவருடைய நண்பர்களான சுசீல், கவுதம் ஆகிய மூன்று பேரையும் பேகூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

விகாசும், பிரதிஷாவும் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக காதலித்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இரண்டு பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இதை தொடர்ந்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க விகாஷ், பிரதிஷா குடும்பத்தினர் முடிவு எடுத்தனர். இதற்கிடையில், பிரதிஷாவின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் விகாஷ் வெளியிட்டுள்ளார். இதனால் பிரதிஷா ஆத்திரமடைந்தார். இதுகுறித்து தனது நண்பர்களான சுசீல், கவுதம், சூர்யாவிடம் பிரதிஷா கூறினார்.

இதனை அடுத்து, அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து விகாசை கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்காக கடந்த 9-ஆம் தேதி விகாசை, மைகோ லே-அவுட்டில் இருக்கும் தனது வீட்டுக்கு பிரதிஷா வரவழைத்தார். அங்கு வைத்து விகாசை, பிரதிஷாவின் நண்பர்கள் அடித்தும், வீடு சுத்தம் செய்யும் மாப் மூலமாகவும் அடித்து தாக்கி கொலை செய்திருப்பதாக துணை காவல் கமிஷனர் சி.கே.பாபா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். கைதான மூன்று பேரையும் விசாரணைக்கு பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் தலைமறைவாக இருக்கும் சூர்யாவை பேகூர் காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.

Rupa

Next Post

பள்ளிகளுக்கு விடுமுறை..! ’யாரும் அறிக்கை வெளியிடாதீங்க’..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி

Tue Sep 20 , 2022
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதட்ட நிலையை அரசியல் கட்சித் தலைவர்கள் உருவாக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை பள்ளிகளுக்கான இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என் நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் இலச்சினை, குறும்படத்தை இணைந்து வெளியிட்டு ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி […]

You May Like