தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், ”எடப்பாடி பழனிசாமி பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு செயல்பட்டார். அவர் தன்னை சூப்பர் புரட்சி தலைவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது 5 ஆண்டுகளிலும் அவரை ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே சந்திக்க முடிந்தது. தங்களை அவர் சந்திக்கவே இல்லை என்று கட்சிக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
அதிமுகவை இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமியை தவிர எல்லோரும் தயாராக இருக்கின்றனர். வழக்கு நிலுவையில் உள்ளதால், இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று நினைத்து யாராவது தேர்தல் ஆணையத்தை அணுகினால் அந்தச் சின்னம் முடங்கிவிடும் வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமியை தவிர்த்துவிட்டு மீதம் உள்ளவர்களை ஒன்றாக இணைப்போம். அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். எடப்பாடி பழனிசாமி தனித்து போட்டியிட்டால் சேலத்தில் கூட டெபாசிட் பெற முடியாது” என்று தெரிவித்தார்.