fbpx

’இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு’..!! பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ் ஆதரவாளர்..!!

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், ”எடப்பாடி பழனிசாமி பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு செயல்பட்டார். அவர் தன்னை சூப்பர் புரட்சி தலைவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது 5 ஆண்டுகளிலும் அவரை ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே சந்திக்க முடிந்தது. தங்களை அவர் சந்திக்கவே இல்லை என்று கட்சிக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

அதிமுகவை இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமியை தவிர எல்லோரும் தயாராக இருக்கின்றனர். வழக்கு நிலுவையில் உள்ளதால், இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று நினைத்து யாராவது தேர்தல் ஆணையத்தை அணுகினால் அந்தச் சின்னம் முடங்கிவிடும் வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமியை தவிர்த்துவிட்டு மீதம் உள்ளவர்களை ஒன்றாக இணைப்போம். அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். எடப்பாடி பழனிசாமி தனித்து போட்டியிட்டால் சேலத்தில் கூட டெபாசிட் பெற முடியாது” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

பூமிக்கு மிக அருகில் சூப்பர் எர்த் கண்டுபிடிப்பு!… உயிரினங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்!… நாசா விஞ்ஞானிகள் தகவல்!

Tue Feb 6 , 2024
பூமிக்கு மிக அருகில் உயிரினங்கள் வாழக்கூடிய சூப்பர் எர்த் என்ற புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது உயிரினங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிர்கள் வாழக்கூடிய சூப்பர் எர்த் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. TOI-715 b என்று பெயரிடப்பட்ட இந்த கிரகம் சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது பூமியை விட ஒன்றரை மடங்கு அகலம் கொண்டது. […]

You May Like