fbpx

’மின்சார சட்டத்திருத்த மசோதாவால் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பில்லை’..! – மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

”மின்சார சட்டத்திருத்தம் எந்தவித இலவச மின்சாரத்தையும் நிறுத்துங்கள் என்று சொல்லவில்லை” என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், “தேசியக்கொடியை அனைத்து வீடுகளிலும் ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரத தேசத்திற்காக பாடுபட்ட முன்னோர்கள் பற்றியும், தியாகிகள் பற்றியும்
இளைஞர்கள் அறிய தேசியக்கொடி ஏற்ற வேண்டும். தேசியக்கொடியின் மகிமையும், பெருமையும் கொடி காத்த குமரனுக்கே, இறக்கும் தருவாயில் கூட தேசிய கொடியினை கைகளில் ஏந்தினார். அது தமிழகத்திற்கு பெருமை.

’மின்சார சட்டத்திருத்த மசோதாவால் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பில்லை’..! - மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

போதைப்பொருளை ஒழிப்பது மிகவும் முக்கியம். தமிழகத்தில் அதிகளவில் போதை பொருள் புழக்கத்தில் இருப்பது கவலை கொள்ளும் விதமாக இருக்கிறது. தமிழக அரசாங்கம் முக்கியமான, உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், மின்சார சட்ட மசோதாவில் நாட்டில் பல சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மின்சார சட்டம் எந்தவித இலவச மின்சாரத்தை நிறுத்துங்கள் என்று சொல்லவில்லை. அச்சட்டம் வந்த பின்பு தான் தெரியும். தமிழகத்தில் சென்னை காசிமேடு துறைமுகத்தை புதுப்பிக்க டெண்டர் விடப்படவுள்ளது. 20-க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் உட்கட்டமைப்பு மேம்படுத்த ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

’மின்சார சட்டத்திருத்த மசோதாவால் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பில்லை’..! - மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

அக்னிபாத் திட்டத்திற்கு வரவேற்பு இருக்கிறதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நம்முடைய இளைஞர்கள் இன்றைக்கு தானாக முன்வந்து ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருக்கிறது. பல பேர் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. பல லட்சம் இளைஞர்கள் தானாக முன்வந்து தங்களை பதிவு செய்து கொண்டு வருகின்றனர்” என்றார்.

Chella

Next Post

’மாணவி ஸ்ரீமதி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம்’..! - அமைச்சர் அன்பில் மகேஷ்

Fri Aug 12 , 2022
மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி, கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த […]
’மாணவி ஸ்ரீமதி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம்’..! - அமைச்சர் அன்பில் மகேஷ்

You May Like