fbpx

செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை..!! மீண்டும் சோதனை..!! பெற்றோரிடம் விசாரணை..!!

கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கு தொடர்பாக ஆய்வு நடப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பதிவு செய்யப்பட்ட வழக்கில் கிடைத்துள்ள புதிய தகவலின்படி சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 8 மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

அமெரிக்க விமான நிலையத்தில் அதிர்ச்சி!… நிர்வாணமாக நுழைந்த நபரால் பரபரப்பு!

Thu Feb 8 , 2024
அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள Port Lauderdale-Raleighwood சர்வதேச விமான நிலையத்திற்கு காரில் வந்த ஒருவர், நிர்வாணமாக விமான நிலையத்திற்குள் நுழைந்தார். அந்த ஆள் நடமாடுவதைக் கண்டு சக பயணிகள் முகம் சுளித்து அவரை விட்டுத் திரும்பினர். விமான நிலையத்தின் முதல் முனையத்தின் செக்-இன் இடைகழி வழியாக அவர் சாதாரணமாக நடந்தார், பின்னர் விமான நிலையத்தின் TSA க்குள் சென்றார். பாதுகாப்புப் பாதையை நோக்கி நடந்தார். பாதுகாவலர்களைக் கடந்து தடை […]

You May Like