கேரளா, திரிபுராவில், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கும் இடையே நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.
இந்தியா கூட்டணி இன்று நடைபெறவுள்ள 7 தொகுதிகளில், உத்தரபிரதேசத்தில் உள்ள கோசி தொகுதி, ஜார்கண்டின் டும்ரி மற்றும் தன்பூர் தொகுதிகள், திரிபுராவில் உள்ள போக்ஸாநகர், உத்தரகாண்டின் பாகேஷ்வர்தொகுதி ஆகிய 5 தொகுதிகளில் இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து இந்த இடைத்தேர்தலை சந்திக்கிறது. மேலும் மேற்கு வங்கத்தில் உள்ள துப்குரி தொகுதி மற்றும் கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியில் இந்தியா கூட்டணி தனித்து போட்டியிடுகிறது.
உத்தரப்பிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததால் அந்த இடம் காலியானது. மற்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவால் வெற்றிடமானது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) நடைபெறுகிறது.