fbpx

பக்கத்து வீட்டை சேதப்படுத்திய ஆடு..!! ஆத்திரத்தில் உரிமையாளரின் பிறப்புறுப்பை கடித்து குதறிய நபர்..!! பகீர் சம்பவம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் 28 வயது நபர் ஒருவரின் ஆடு பக்கத்து வீட்டிற்கு சென்று சில பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால், பக்கத்து வீட்டுக்காரர் ஆட்டின் உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். இந்த சண்டையின் போது 31 வயது கங்காராம் சிங் என்பவர், ஆட்டு உரிமையாளரின் பிறப்புறுப்பை கடித்துள்ளார். இதனால், அந்த இளைஞர் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட நபரின் பிறப்புறுப்பில் 4 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில், “எனது ஆடு கங்காராம் வீட்டிற்குள் தவறுதலாக நுழைந்து சில பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் என்னை கீழே தள்ளிவிட்டு எனது பிறப்புறுப்பை கடித்தார். இதனால் நான் மயங்கி விழுந்தேன்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது போலீசார் முதலில் புகாரை பதிவு செய்ய மறுத்தனர்” என கூறியுள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், இந்த காயம் வெளிப்புறத்தில் தான் ஏற்பட்டுள்ளது. 4 தையல்கள் போடப்பட்டுள்ளது. அவரின் உயிர் நாடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, அவரின் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

சூரியனை நோக்கி பாய தயாரான ஆதித்யா எல்-1..!! ஒத்திகை முடிந்தது..!! புதிய புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ..!!

Wed Aug 30 , 2023
விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1 ஒத்திகை நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் – 3 வெற்றிக்கு பிறகு இஸ்ரோ தனது அடுத்த மிஷனில் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 சாட்டிலைட் செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல் 1 […]

You May Like