fbpx

அமைச்சரின் இலாக்கா மாற்றத்தை கேள்வி கேட்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை…! பொன்முடி அதிரடி கருத்து…!

அமைச்சர்‌ செந்தில்பாலாஜி அவர்களை நீக்க வேண்டும்‌ என ஆளுநர்‌ அவர்கள்‌ 31.5.2023 அன்று ஒரு கடிதம்‌ எழுதியிருந்தார்‌. இந்தக்‌ கடிதம்‌ கிடைக்கப்‌ பெற்ற அடுத்த நாளே முதலமைச்சர்‌ 1.6.2023 அன்று ஆளுநர்‌ அவர்களுக்கு இது குறித்த தெளிவான சட்ட ரீதியான காரணங்களை விளக்கிக்‌ கூறி பதில்‌ கடிதம்‌ அனுப்பி வைத்திருந்தார்‌.

அந்த கடிதத்தில்‌, ஆளுநரின்‌ கடிதம்‌ அரசியல்‌ சட்டத்திற்கு எதிரானது என்பதைசுட்டிக்காட்டியும்‌ மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு தான் அமைச்சரை நீக்கவோ, நியமிக்கவோ பரிந்துரை செய்யும்‌ அதிகாரம்‌ இருக்கிறது என்பதையும்‌- இது குறித்து பரிந்துரைகளை அளிக்கும்‌ ஆளுநருக்கு அரசியல்‌ சாசனத்தின்படி எவ்வித அதிகாரமும்‌ தெளிவாக -அரசியல்‌ சட்டப்பிரிவு 164(1) – ஐ மேற்கோள்‌ காட்டி எழுதியிருக்கிறார்‌.

மேலும்‌ அக்கடிதத்தில்‌ ஒரு மாநில அமைச்சரவையில்‌ யார்‌ அமைச்சராகஇருக்க வேண்டும்‌, இருக்க கூடாது என்பதை முடிவு செய்யும்‌ அதிகாரம்‌ ஆளுநருக்கு இல்லை என்பதை முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆளுநருக்கு அடிப்படை அரசியல்‌ பாடமே எடுத்திருக்கிறார்‌. இன்னும்‌ சொல்வதென்றால்‌ தற்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர்‌ மாண்புமிகு அமித்ஷா அவர்கள்‌ குஜராத்‌ உள்துறை அமைச்சராக இருந்த போது, வழக்குகள்‌ விசாரணையில்‌ இருந்த நிலையில்‌ எப்படி பதவியில்‌ தொடர்ந்தார்கள்‌ என்பதைக்‌ கூட உதாரணமாக சுட்டிக்காட்டியிருந்தார்‌.

அக்கடிதத்திலேயே அமைச்சர்‌ செந்தில்பாலாஜி விஷயத்தில்‌ கடிதம்‌ எழுதும்‌ ஆளுநர்‌ அவர்கள்‌ அதிமுக முன்னாள்‌ அமைச்சர்கள்‌ மீது ஊழல்‌ வழக்குத்‌ தொடர கோரப்பட்ட அனுமதியை அளிக்காமல்‌ ஏன்‌ கோப்புகளை கிடப்பில்‌ போட்டு வைத்திருக்கிறார்‌ என்றும்‌ கேள்வி எழுப்பியிருந்தார்‌. அதற்கு எல்லாம்‌ எந்தபதிலையும்‌ கூற ஆளுநருக்கு திராணி இல்லை போலும்‌. அதை ஏனோ மறந்துவிட்டு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அனுப்பிய 1.6.2023 நாளிட்ட பதில்‌ கடிதத்தினை வசதியாக மறைத்து விட்டு, தான்‌ முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தை மட்டும்‌ லீக்‌ செய்திருப்பது அற்பத்தனமான அரசியல்‌ என்றே கருத வேண்டியதிருக்கிறது.

அமைச்சர்‌ செந்தில்பாலாஜி அவர்களின்‌ உடல்நிலையை கருத்தில்‌ கொண்டு- அரசு பணிகள்‌ தொடர்ந்து தொய்வின்றி நடைபெற வேண்டும்‌ என்ற நோக்கத்தோடு அமைச்சர்‌ செந்தில்பாலாஜி கவனித்து வந்த பொறுப்புகளை அமைச்சர்கள்‌ தங்கம்‌ தென்னரசு மற்றும்‌ முத்துச்சாமி அவர்களுக்கு மாற்றி வழங்கப்‌ பரிந்துரைத்து முதலமைச்சர்‌ அவர்கள்‌ நேற்று மதியம்‌ கடிதம்‌ எழுதியிருந்தார்கள்‌.

இந்திய அரசியல்‌ அமைப்புச்‌ சட்டத்தின்படி அமைச்சர்களின்‌ பொறுப்புகளை மாற்றி அமைக்கும்‌ அதிகாரம்‌ முதலமைச்சருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில்‌, தேவையற்ற வகையில்‌ அமலாக்கத்துறை அமைச்சர்‌ செந்தில்பாலாஜி குறித்து விசாரித்து வருவதை சுட்டிக்காட்டி- சரியான காரணத்தை மேற்கோள்‌ காட்டி கடிதம்‌ அனுப்புமாறு ஆளுநர்‌ கேட்டிருக்கிறார்‌. இது மாநில அரசின்‌ நிர்வாகத்தில்‌ ஆளுநர்‌ தலையிடுவதாகவும்‌- அரசியல்‌ சட்டத்திற்கு புறம்பானதாகவும்‌ நாங்கள்‌ பார்க்கிறோம்‌.

எப்படி அமைச்சர்களை நியமிப்பதிலும்‌, நீக்குவதிலும்‌ முதலமைச்சரின்‌ பரிந்துரைப்படி ஆளுநர்‌ செயல்பட வேண்டுமோ- அதே போல்தான்‌ இலாகா மாற்றுவதிலும்‌ செயல்பட வேண்டும்‌. ஒரு அமைச்சரின்‌ இலாகாவை ஏன்‌ முதலமைச்சர்‌ மாற்றுகிறார்‌ என்று காரணம்‌ கேட்க ஆளுநருக்கு அதிகாரமும்‌ ஒருவர்‌ விசாரணையை சந்திப்பது அவரது அமைச்சர்‌ பொறுப்புக்கான தகுதியை அரசியல்‌ சட்டப்படி உரிமையும்‌ இல்லை. மேலும்‌ அமைச்சர்‌ ஒரு விசாரணையை சந்திப்பது அவரது அமைச்சர் பொறுப்புக்கான தகுதியை எந்த விதத்திலும் பாதிக்காது என்ற நிலையில் அதனை ஆளுநர் சுட்டி காட்டி இருப்பது தேவையற்றது.

Vignesh

Next Post

அண்ணாமலை பகீர்...! டி.ஆர் பாலு தொடுத்த வழக்கு...! ஜூலை 14-ம் தேதி நீதிமன்றத்தில் ஆதாரம் கொடுப்பேன்...!

Fri Jun 16 , 2023
திமுக எம். பி டி.ஆர் பாலு கொடுத்த வழக்கில் ஜூலை 14ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் ஆஜராக உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்த நிலையில் தான் ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவில் சொத்து […]

You May Like