fbpx

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தீர்ப்பளித்த குஜராத் ஐகோர்ட்!… அரசியலமைப்புக்கு எதிரானது!… நீதிபதிகள் கண்டனம்!

குஜராத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தனது 27 வார கருவை கலைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஆகஸ்ட் 19 தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் வன்கொடுமை காரணமாக கர்ப்பமான பெண்ணின் கருவை கலைக்க அனுமதி மறுத்த குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், ஆகஸ்ட் 8ம் தேதி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் உரிய உத்தரவு பிறப்பிக்காமல் தாமதம் செய்தது ஏன்?. புதிய மருத்துவக் குழுவை உடனடியாக அமைத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து, அதன் அறிக்கையை 20-8-23 அன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அன்றைய தினமே குஜராத் உயர் நீதிமன்றம், பெண்ணின் கருவை கலைக்க அனுமதி மறுத்து தீர்ப்பு வெளியிட்டது. இந்த சூழலில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதிகள் நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘குஜராத் உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது? உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இந்தியாவில் எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க முடியாது. இது அரசியலமைப்புக்கு எதிரானது.

மற்ற வழக்கை போல இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது என்பது சொல்வதற்கே வேதனையாக இருக்கிறது. மருத்துவ அறிக்கையின் பரிந்துரை அடிப்படையில் மனுதாரரின் 28 வார கருவை கலைக்க அனுமதிக்கிறோம். அதே சமயம், கரு உயிருடன் இருந்தால் அதனை மருத்துவமனையில் பராமரித்தல் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அளித்து, அந்த குழந்தையை குஜராத் மாநில அரசே தத்தெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

Kokila

Next Post

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய பிரபல க்யூட் நடிகை!… கோபி சொன்ன அந்த தகவல்!… இதுதான் காரணமா?

Tue Aug 22 , 2023
மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ள பாக்கியலட்சுமி தொடரில் இருந்து பிரபல நடிகை விலகவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. எப்போதும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்துவந்தது. குடும்பத்தில் இருக்கும் பெண்களால் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு சந்திக்கும் கஷ்டங்களும் அதிலிருந்து அவர்கள் வெளியே வந்து சாதித்து பலருக்கும் முன்மாதிரியாக இருப்பது போன்று கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரேட்டிங்கில் இந்த […]

You May Like