fbpx

சிறுமியின் பிறந்தநாள் விழாவில் நடந்த பயங்கரம்..!! 4 பேர் பலி..!! 28 பேர் படுகாயம்..!! நடந்தது என்ன..?

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலபாமா மாகாணத்தின் டாட்வில்லி பகுதியில் 16 வயது சிறுமி ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் அப்பகுதியில் உள்ள நடன அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது, அங்கிருந்தவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த 28 பேர் ரஸ்ஸல் மருத்துவமனையிலும், கிழக்கு அலபாமா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் உள்ளூர் கால்பந்து வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். எனினும், தாக்குதல் நடத்தியவர் குறித்த விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.

Chella

Next Post

அதிர்ச்சி..!! தமிழக ராணுவ வீரர்கள் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்ற வழக்கு..!! சக வீரரே கொன்றது அம்பலம்..!!

Mon Apr 17 , 2023
பதிண்டா ராணுவ நிலையத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு வழக்கில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக ஜவான் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், உறங்கிக் கொண்டிருந்த 4 ராணுவ […]

You May Like