fbpx

மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை தோழிகளுக்கு அனுப்பி வைத்த கணவன்..!! என்ன காரணம் தெரியுமா..?

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் பெருமாள் (34). இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இவருக்கு 9 வயதில் மகள் உள்ள நிலையில், மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சதீஷ் பெருமாளுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் சுமூகமாக பேசி, விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகள், தாயுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், திருமண உறவின் போது இருவரும் தனிமையில் இருந்த ஆபாச வீடியோக்களையும், மனைவியின் அந்தரங்க புகைப்படங்களையும் தனது செல்போனில் வைத்திருந்த சதீஷ், அதனை இணையத்தில் பதிவேற்றி, மனைவியின் தோழிகளுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி, கணவர் சதீஷ் பெருமாளின் இந்த செயல் குறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் இது குறித்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், வழக்குப்பதிவு செய்து சதீஷ் பெருமாளை கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ஏப்ரல் மாதம் முதல்..!! வலி நிவாரணி, இதய நோய் மருந்துகளின் விலை அதிரடியாக உயருகிறது..!!

Tue Mar 28 , 2023
ஏப்ரல் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையில் மருந்துகளின் விலை ஒவ்வொரு ஆண்டும் 10% வரை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம். அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட மருந்துகளின் விலை ஏப்ரல் மாதம் முதல் உயர்த்துவதற்கு […]

You May Like