fbpx

சென்னையில் நடந்த சம்பவம்..!! அவரு இறந்துட்டாராமே..!! மாநகராட்சியின் அடுத்த ஆக்‌ஷன் என்ன..?

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள், பொதுமக்களை தாக்கி வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்நிலையில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே மாதா கோயில் தெருவில் கடந்த 18ஆம் தேதி சுந்தரம் என்ற முதியவர் ஒருவர் நடந்து சென்றார்.

அப்போது அங்கிருந்த மாடு ஒன்று திடீரென சுந்தரத்தை முட்டி தூக்கி வீசியது. இதில் தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்த நிலையில், மயக்கமடைந்தார். பின்னர், அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 10 நாட்களாக சுந்தரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சுந்தரம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியும் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

தீபாவளி பண்டிகை..!! நவ.9 முதலே சொந்த ஊருக்கு செல்லலாம்..!! போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிவிப்பு..!!

Sat Oct 28 , 2023
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒரு நாளைக்கு சென்னை, திருச்சி, நெல்லை, கோவை, மதுரை, பெங்களூர், திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கு ஏசி வசதியுடன் கூடிய விரைவு பேருந்துகள் மற்றும் […]

You May Like