தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞரும், கணபதிபட்டி கிராமத்தை சேர்ந்த பவித்ரா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வெறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த காதல் விவகாரத்திற்கு பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்தனர். இதனால், காதல் ஜோடியினர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதானால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், 20க்கும் மேர்பட்டோர் மதுபோதையில் சுரேந்தரின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை மற்றும் தாயாரை சாதிப்பெயரை சொல்லி இழிவாக பேசி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த சுரேந்தரின் உறவினரின் கழுத்தை நெறித்து கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். கல், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி, சாதிப்பெயரை சொல்லி தீண்டாமை கொடுமையிலும் ஈடுபட்டுள்ளனர். இதில் சுரேந்தரின் தந்தை செல்வம் பலத்த காயமடைந்துள்ளார்.
அதோடு சுரேந்தரின் தாயார் முருகம்மாளை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றுள்ளனர். கடத்தி காட்டிற்கு அழைத்துச் சென்று அவரின் ஆடையில் கலைத்து வாயில் மதுவை ஊற்றி பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். மேலும், கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இரவில் கடத்திச்செல்லப்பட்ட பெண் மறுநாள் காலையில் தான் கண்டுபிடிக்கப்படுகிறார். பயத்தால் பேச்சின்றி, மன உளைச்சலுக்குள்ளாகி அப்பெண் காட்சியளித்துள்ளார்.
அந்த பெண்ணை கடத்தி சென்றவர்கள் விடுவித்திருந்த நிலையில், சாலையில் சுற்றித்திரிந்த பெண்ணை போலீசார் அழைத்து வந்துள்ளார். பட்டியலின மக்கள் தங்கியிருக்கும் குடியிருப்புக்குள் புகுந்து பெண்ணின் சேலை கழற்றி இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more ; உஷார்!. உடல் உறுப்புகளில் நுழைந்த பிளாஸ்டிக் துகள்கள்!. விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!.