fbpx

’தமிழ்நாடு’ விவகாரம்..!! ஆளுநர் உரை..!! சட்டப்பேரவையில் நடக்கப்போகும் ட்விஸ்ட்..!!

சட்டப்பேரவையில் ஆளுநரின் உரையை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நாளை தொடங்கவுள்ளது. சட்டமன்றத்தைப் பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்ட தடை உள்ளிட்ட சுமார் 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. ஆனால், இதற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனைக் கண்டித்தும், சனாதனம் மற்றும் தமிழ்நாடு குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் உரையை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

’தமிழ்நாடு’ விவகாரம்..!! ஆளுநர் உரை..!! சட்டப்பேரவையில் நடக்கப்போகும் ட்விஸ்ட்..!!

இதேபோல, மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செவ்வாய் கிழமை பேரவை நிகழ்வுகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கபட்டு ஆளுநர் உரை மீதான விவாதம் புதன்கிழமை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Chella

Next Post

மூத்த பாஜக தலைவரும், முன்னாள் ஆளுநருமான கேசரி நாத் திரிபாதி காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்...

Sun Jan 8 , 2023
பாஜக மூத்த தலைவரும், மேற்கு வங்கம், பீகார் மற்றும் இரு மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான கேசரி நாத் திரிபாதி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 88. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள அவரது இல்லத்தில் திரிபாதி காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை பிரயாக்ராஜில் நடைபெறும். கேசரி நாத் திரிபாதி மூன்று முறை உத்தரப் பிரதேசம் சட்டப் பேரவையின் சபாநாயகராக இருந்த பழம்பெரும் அரசியல்வாதி. ஜூலை […]

You May Like