fbpx

பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி..!! திடீரென தெரிந்த செல்போன்..!! ஒரே சத்தம்..!! வைத்தது யார் தெரியுமா..?

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஆவடியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது தாயின் இரண்டாவது கணவர் பாவா பக்ருதீன் (39). மாற்றுத்திறனாளியான இவர், சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கிடையே, கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு தெரியாமல் பாத்ரூமில் மொபைல் போன் கேமராவை பாவா பக்ருதீன் ஆன் செய்து வைத்துள்ளார். சிறுமி குளித்துக் கொண்டிருந்தபோது பாத்ரூமில் செல்போன் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தனது தாயிடம் அழுதவாறு சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். இதுகுறித்து, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணையில், பாவா பக்ருதீன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பக்ருதீனை போக்சோவில் கைது செய்த போலீசார், அவரை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Chella

Next Post

மக்களே..!! பெட்ரோல் பங்க்குகளில் இந்த 6 வசதிகளை நீங்கள் இலவசமாக பெறலாம்..!! பலருக்கும் தெரியாத தகவல்..!!

Wed Jun 14 , 2023
தற்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஏறக்குறைய அனைவரின் வீடுகளிலும் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை என்பது கணிசமாக கூடி வருகிறது. இதன் காரணமாக தான் முக்கிய சாலைகளின் ஓரம் பெட்ரோல்-டீசல் பங்க்குகள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த பெட்ரோல் நிலையங்களில் நாம் பெட்ரோல், டீசல் நிரப்ப காசு கொடுக்க வேண்டும். ஆனால், பணம் கொடுக்காமல் அங்கு உள்ள 6 முக்கிய வசதிகளை நாம் […]

You May Like