fbpx

காதலியை கர்ப்பமாக்கி கொடூரமாக கொன்று ஏரியில் புதைத்த காதலன்..!! 100 நாள் வேலைத் திட்டத்தால் வெளிவந்த உண்மை..!!

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே சாலவனூர் கிராமத்தில் கடந்த 6ஆம் தேதி 100 நாள் வேலை திட்டத்தில் கிராம மக்கள் ஏரிக்கரை வாய்க்கால் பகுதியில் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது வாய்க்காலை ஆழப்படுத்த பள்ளம் தோண்டியபோது மண்ணிலிருந்து கை பகுதி தெரியவரவே அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், ஆய்வு செய்தபோது இளம்பெண் சடலம் ஒன்று புதைக்கபட்டிருந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தினர்.

விசாரனையின் போது இளம்பெண் மாயமானதாக விழுப்புரத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் ஏதும் பெறாமல் இருந்த நிலையில், சடலம் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை பார்த்த பிரியதர்ஷினியின் தங்கை கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தனது சகோதரி போன்றும் அவர் அணிந்திருக்கக் கூடிய நகை மற்றும் உடை சகோதரி அணிந்திருந்தது என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கஞ்சனூர் போலீசார் சிறுமியை அழைத்துச் சென்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர். இதனைக் கண்ட இறந்த பெண்ணின் தங்கை தனது சகோதரி தான் என உறுதிபடுத்தியுள்ளார். மேலும் போலீசாரிடம், பிரியதர்ஷினி சித்தேரிபட்டினை சார்ந்த டிரம்ஸ் இசைக்கும் இளைஞரை 2 வருடமாக காதலித்து வந்ததும், காதலனால் அக்கா 3 மாதம் கர்ப்பமாகியதால் அகிலனை திருமணம் செய்து கொள்ள வீட்டை விட்டு வெளியேறியதாக சகோதரி தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் பிரியதர்ஷினியின் காதலன் அகிலன் சென்னையில் தலைமறைவாகி இருந்தது தெரியவரவே சென்னை சென்று அகிலனை போலீசார் கைது செய்து விழுப்புரம் அழைத்து வந்தனர்.

அகிலனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கர்ப்பமாக இருந்ததால் பிரியதர்ஷின் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கட்டாயப்படுத்தியதாகவும் கப்பூர் வழியாக சாலவனூர் செல்லும் போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்படவே ஆத்திரத்தில் கன்னத்தில் அறைந்து கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் இரு நண்பர்கள் உதவியுடன் சண்டை ஏற்பட்ட இடத்திலுள்ள வாய்க்காலில் புதைத்து விட்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டதாக தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் காதலன் மீது வழக்குப்பதிவும் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதால் போக்சோ வழக்கும் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Chella

Next Post

இன்ஸ்டா பெண்களே உஷார்..!! ஆசைக்காட்டி மோசடி செய்த 3 பேர்..!! பயத்தில் கல்லூரி மாணவி தற்கொலை..!!

Fri May 12 , 2023
கடந்த சில ஆண்டுகளாகவே மொபைல் ஆப் மூலம் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடம் பணம் பிடுங்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்தும், அதிகபடியானவர்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஆன்லைன் முதலீடு மூலம் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 […]

You May Like