fbpx

’உண்மையை மறைத்த மாயாஜால்’..! பட்டாவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாயாஜாலுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

சென்னை ஈ.சி.ஆரில் காணத்தூர் ரெட்டிகுப்பத்தில் அமைந்துள்ள மாயாஜாலில், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இரண்டு ஏக்கர் அளவிலான இடம் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு விண்ணப்பித்து அது நிலுவையில் இருந்து, பின்னர் பட்டா வாங்கப்பட்ட நிலையில், வருவாய் துறை பதிவேடுகளில் மாற்றம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக, மாயாஜால் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இரண்டு ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்க கடந்த 2015ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.

’உண்மையை மறைத்த மாயாஜால்’..! பட்டாவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

பின்னர், திருப்போரூர் தாலுகாவில் அந்த நிலம் சேர்ந்த நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திருப்போரூர் தாசில்தார் தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு 2017ஆம் ஆண்டு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இன்று நீதிபதிகள் டி.ராஜா மற்றும் குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது, குறிப்பிட்ட நிலம் தொடர்பான பல உண்மை தகவல்களை தனி நீதிபதி முன்பு மறைத்து பட்டா பெற்றுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் வாதிட்டப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், மாயாஜாலுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

Chella

Next Post

சென்னையில்... போலீசை கையில் கடித்து வைத்த இளம்பெண்; விசாரணைக்கு சென்ற இடத்தில் நடந்த பரிதாபம்..!

Thu Sep 1 , 2022
சென்னை வண்ணாரபேட்டையில் வசித்து வருபவர் செல்வி. இவரும் திருவெற்றியூரைச் சேர்ந்த ரேவேந்திர குமார் என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தம் நடந்ததிலிருந்து செல்வி ரேவேந்திர குமாரிடம், நகை மற்றும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இவரின் இந்த செயலால் ரேவேந்திர குமார் வீட்டில் இவர்களது கல்யானத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி திருவெற்றியூரில் இருக்கும் காதலன் வீட்டிற்கு […]

You May Like