தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய நடன அழகியை ராணுவ உயரதிகாரி ஒருவர் டேராடூனுக்கு அழைத்து சென்று கொலை செய்து டாய்லெட் கிளினரை ஊற்றி தடயத்தை அழித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
டேராடூன் நகரில் பண்டிட்வாரி பிரேம்நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேந்து உபாத்யாய் (42). திருமணம் நடந்து மனைவி, மகள் என குடும்பத்துடன் வசித்து வரும் இவர், கிளமெண்ட் டவுன் பகுதியில் ராணுவ லெப்டினன்ட் கர்னலாக பதவி வகித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி நகரில் நடன பார் ஒன்றில், நேபாள நாட்டை சேர்ந்த ஷ்ரேயா சர்மா (30) என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்திருக்கிறார். நாளடைவில் இருவரும் தகாத உறவில் இருந்து வந்துள்ளனர்.
இதனால், பிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் ஷ்ரேயாவை தனியாக தங்க வைத்துள்ளார். இந்த சம்பவம் ராணுவ அதிகாரியின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஷ்ரேயா சர்மா தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த ராணுவ அதிகாரி, கடந்த சனிக்கிழமை இரவில் ராஜ்பூர் சாலையில் உள்ள கிளப்புக்கு ஷ்ரேயாவை அழைத்து சென்று, அவருடன் ஒன்றாக மதுபானம் குடித்துள்ளார்.
அதன்பின்பு டேராடூனுக்கு அழைத்து சென்ற அதிகாரி, காரை ஓரத்தில் நிறுத்தி விட்டு, சுத்தியலால் அடித்து, ஷ்ரேயாவை கொலை செய்துள்ளார். உயிரிழந்த ஸ்ரேயாவின் உடலை சாலையோரம் வீசிய அதிகாரி, டாய்லெட் கிளினரை ஊற்றி தடயங்களை அழிக்க முயன்றுள்ளார். , மழை பெய்ததில், திரவம் கரைந்து போய்விட்டது. அவருடைய முகம் அடையாளம் காணப்பட்டது. போலீசார் 24 மணி நேரத்தில் விசாரணை செய்து குற்றவாளியான உபாத்யாயை கைது செய்தனர். விசாரணையில் அவர் உண்மையை ஒப்பு கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.