fbpx

இது என்னடா காளிக்கே வந்த சோதன!…கவர்ச்சி நடிகையாக சித்தரித்த உக்ரைன்!… இந்தியர்கள் கடும் கண்டனம்!

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக காளியின் தோற்றத்தை கவர்ச்சி நடிகையாக சித்தரித்து உக்ரைன் இராணுவ அமைச்சகம் போட்ட டுவிட்டர் பதிவுக்கு இந்தியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பதிவில், இடம்பெற்றுள்ள இரண்டு புகைப்படங்களில், ஒன்றில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு அதன் புகை வானுயர பரவியது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அடுத்ததாக அந்த புகைப்படத்தை எடிட் செய்து, அதில் இந்தியாவில் காவல் தெய்வமாக மக்களால் கும்பிடப்படும் காளியின் உருவம் கொண்ட புகைப்படத்தை சேர்த்துள்ளனர். அதில் அந்த காளியின் தோற்றத்தை கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ போல் சித்தரித்து உள்ளனர். இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக இவ்வாறு செய்துள்ளதாக பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்ப்புகள் அதிகமானதால் இந்த டுவிட்டை உக்ரைன் இராணுவ அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டாலும், இதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். உக்ரைன் இராணுவ அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த சர்ச்சைக்குரிய டுவிட் நீக்கப்பட்டுவிட்டாலும், அதனை சிலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்துள்ளதால், சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக அந்த புகைப்படம் பரவி வருகிறது. இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டுள்ள அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Kokila

Next Post

ஒரே ஒரு டிக்கெட் போதும்!... ரயிலில் யார்வேண்டுமானாலும் பயணிக்கலாம்!... முழுவிவரம் இதோ!

Mon May 1 , 2023
உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை மற்றொரு நபருக்கு மாற்ற ஒரு பயணியை அனுமதிக்கும் புதிய வழிமுறைகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. தொலைதூர பயணத்திற்கு வசதியாகவும் பயணச்செலவு குறைவாகவும் இருப்பதால் தினமும் லட்சக்கணக்கானோர் ரயில்களில் பயணம் செய்கிறனர். ஆனால் ரயிலில் டிக்கெட் எடுப்பதில் சில நேரங்களில் சிரமம் ஏற்படுகிறது. சிலர் முன்கூட்டியே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வதால் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். டிக்கெட் புக்கிங் செய்த பிறகு திடீரென்று சில காரணங்களால் அவர்கள் தங்கள் […]

You May Like