fbpx

சென்னை மக்களை அலறவிட்ட ’மிக்ஜாம்’ புயல்..!! பொது போக்குவரத்து, தேர்வுகள் ரத்து..!!

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) சென்னையை புரட்டி போட்டுள்ளது. கடந்த 2015இல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை விட மிக்ஜாம் புயல் பாதிப்பு அதிகம் என கூறப்படுகிறது. அந்த அளவுக்கு சென்னை புறநகர் மட்டுமல்லாது சென்னை மத்திய முக்கிய பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய அரசு சார்பிலும், பல்வேறு தன்னார்வலர்களும், அரசியல் அமைப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர். தற்போது மிக்ஜாம் புயல் சென்னையை விட்டு விலகியதால், மழையின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.

பொதுவிடுமுறை :

கனமழை பாதிப்பு காரணமாக நேற்று போல இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. ராணிப்பேட்டையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை இன்று முற்றிலும் நிறுத்தப்பட்டது.

விமான சேவைகள் :

சென்னையில் விமான சேவை இன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அருகம்பாக்கத்தில் தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தால் சென்னை பிரதான பேருந்து நிலையமான கோயம்பேட்டிற்கும், வடபழனிக்கும் இடையே கூட போக்குவரத்தை செயல்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. சென்னை மத்திய பகுதியை விட புறநகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ரத்து :

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழக தேர்வுகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

உதவி எண்கள் :

சென்னை மாநகராட்சி பகுதியில் முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்த உதவி எண் 1913 என்ற எண் வேலை செய்யாத காரணத்தால் 044-2519207, 044-2519208, 044-2519209 ஆகிய எண்ணிற்கு அழைக்கவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’எதற்காக வரி கட்டுகிறோம்’..!! ’இது கேவலமான விஷயம்’..!! தமிழ்நாடு அரசை தாக்கிய விஷால்..!!

Tue Dec 5 , 2023
வங்கக் கடலில் உருவாகிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், கனமழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. வீடுகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “புயல், மழையால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும். பின்னர் […]

You May Like