fbpx

அடுத்த 3 மணி நேரம்..!! 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை..!!

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 14ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கடலூர், மயிலாடுதுறை, நாகை, மற்றும் திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

உடம்பில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு..!! கப்பிங் தெரபி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Mon Nov 13 , 2023
கப்பிங் தெரபி என்பது சீனாவில் தோன்றிய ஒரு பழங்கால சிகிச்சை முறையாகும். இந்த கப்பிங் மசாஜ் சிகிச்சையானது உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்க கலாச்சாரங்களில் நடைமுறையில் உள்ளது. கப்பிங் தெரபி, பாரம்பரிய சீன மருத்துவத்தில் ஒரு பழமையான நுட்பம், ஒரு இயற்கை தீர்வாக பிரபலமடைந்து வருகிறது. தோலின் மேற்பரப்பில் ஒரு வெற்றிடத்தை உருவாக்குவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த பழங்கால நடைமுறையானது […]

You May Like