fbpx

ஒரே ரயில் நிலையம்… ஒரே தயாரிப்பு!… நாடுமுழுவதும் 1037 ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன!

சமீபத்தில் ரயில்வே அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒரே ரயில் நிலையம் ஒரே பொருள்’ திட்டம் நாடுமுழுவதும் 1037 நிலையங்கள் 1134 OSOP விற்பனை நிலையங்களுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2022 – 23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சகம் சார்பில் நாடு முழுதும் உள்ள ரயில் நிலையங்களில், ‘ஒரு நிலையம் ஒரே பொருள்’ திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. உள்ளூர் பொருட்களின் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் இந்த திட்டம், கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி துவங்கி படிப்படியாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதையடுத்து, நாடு முழுதும் 21 மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள 728 ரயில் நிலையங்களில், மொத்தம் 785 விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதன் முதற்கட்டமாக, நாட்டில் உள்ள 94 ரயில் நிலையங்களில், சிறு, குறு, உற்பத்தியாளர்கள், தங்கள் தயாரிப்புகளை, இந்த விற்பனை நிலையங்களில் வைத்து விற்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து, உள்ளூரில் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள், ஜவுளிகள், பாரம்பரிய ஆடைகள், விவசாயப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என அந்தந்த பகுதிகளுக்கு தனித்து வமான பல்வேறு வகையான தயாரிப்புகள் இந்த விற்பனையகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பழங்குடியினரால் உருவாக்கப்பட்ட கலைப் பொருட்கள், நெசவாளர்களின் கைத்தறிகள், உலகப் புகழ் பெற்ற மரவேலைப்பாடு பொருட்களும், இந்த விற்பனை நிலையங்களை அலங்கரிக்கின்றன.

இதன்படி, தமிழகத்தின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளும், ஈரோடில் சென்னிமலை படுக்கை விரிப்புகளும், மதுரையில் சுங்குடி சேலைகளும், திருநெல்வேலியில் பனைமரப் பொருட்களும், தஞ்சாவூரில் பொம்மைகளும் விற்கப்படுகின்றன. வடகிழக்கு மாநில ரயில் நிலையங்களில், பாரம்பரிய ராஜ்போங்ஷி ஆடைகள் மற்றும் சணல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஜம்மு – காஷ்மீரில், காஷ்மீரி கிர்தா, காஷ்மீரி கஹ்வா மற்றும் உலர் பழங்கள் பிரபலமானவை.

தென்மாநிலங்களில் முந்திரி பொருட்கள், மசாலா பொருட்கள், கைத்தறி புடவைகள் போன்றவை பயணியரை கவர்ந்து வருகின்றன. நாட்டின் மேற்குப் பகுதியில், எம்பிராய்டரி மற்றும் ஜரி ஜர்தோசி, தேங்காய் அல்வா உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை வசீகரித்துள்ளன. உள்ளூர் தயாரிப்புப் பொருட்கள் என்பதால், இவற்றை ரயில் பயணியர் அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு மார்ச்சில் துவங்கப்பட்ட இந்த திட்டத்தில், மே மாதம் 14ம் தேதிவரை 25 ஆயிரத்து 109 பேர் பயனடைந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இதேபோல், இந்த முன்னோடி திட்டம் நவம்பர் 9 ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 1037 நிலையங்கள் 1134 OSOP விற்பனை நிலையங்களுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மொத்தம் 39,847 நேரடி பயனாளிகள் OSOP திட்டத்தின் கீழ் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர், மேலும் 1,43,232 மறைமுகப் பயனாளிகள் ஒரு ஒதுக்கீட்டிற்கு சராசரியாக 5 பயனாளிகள் எனக் கருதுகின்றனர். இந்த விற்பனை நிலையங்களின் மொத்த விற்பனை 49.58 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

Kokila

Next Post

அடுத்த 6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்...!

Wed Nov 15 , 2023
அடுத்த 6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, […]
புயலுக்கு நடுவே பூக்களாய் மலர்ந்த 270 குழந்தைகள்..!! மாவட்ட ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்..!!

You May Like