fbpx

’ஓபிஎஸ் தரப்பு இவ்வாறு செய்தது நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல்’..! நீதிபதி கண்டனம்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான இன்றைய விசாரணையில், நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதியிடம் புகாரளித்தது குறித்த ஓபிஎஸ் தரப்புக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். ஜூலை 11ஆம் தேதி உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துகளை நியாயப்படுத்தும் விதமாக செயல்பாடு உள்ளது எனவும் அவர் கூறினார்.

’ஓபிஎஸ் தரப்பு இவ்வாறு செய்தது நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல்’..! நீதிபதி கண்டனம்

தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம். திருத்தம் இருந்தால் முறையிட்டிருக்கலாம். ஆனால், இவ்வாறு செய்தது நீதித்துறையை களங்கப்படும் செயல், கீழ்த்தரமான செயல் என்றும் அவர் கூறினார். மேலும், அதிமுக பொதுக்குழு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை விசாரிக்கிறார். வைரமுத்து தரப்பில் கோரிக்கையை ஏற்று வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

அசாமில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய மத பள்ளி இடிக்கப்பட்டது...!

Thu Aug 4 , 2022
அசாம் மாநிலத்தின் கவுகாத்தி, பார்பேடா, மற்றும் மொரிஹன் ஆகிய மாவட்டங்களில் மத்திய புலனாய்வு துறையுடன் இணைந்து மாநில காவல்துறையினர் கடந்த மாத இறுதியில், அதிரடியாக சோதனை நடத்தினர். அவர்கள் நடத்திய சோதனையில் வங்காளதேசத்தில் இயங்கி வரும் அன்சருல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த, முப்தி முஸ்தபா, அம்ருதின் அன்சாரி, மமுன் ரஷித் உட்பட 12 பேரை காவல்துறையினர், கைது செய்தனர். ‘அன்சருல் இஸ்லாம்’ வங்காளதேசத்தில் இயங்கி வரும் […]

You May Like