fbpx

ஃபேஸ்புக் நேரலையில் அறிவித்துவிட்டு லாட்டரி கடைக்கு தீவைத்து கொளுத்திய நபர்..!! என்ன காரணம் தெரியுமா..?

கேராளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஃபேஸ்புக் நேரலையில் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு லாட்டரி ஏஜென்சி கடைக்கு தீ வைத்த சம்பவம் நடந்திருக்கிறது. கொச்சி அருகே இருக்கக் கூடிய திருப்பூணித்துறாவின் வடக்கே கோட்டா பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர்தான் இந்த செயலை செய்திருக்கிறார். கடந்த சனிக்கிழமை மாலை 5.40 மணியளவில் இந்த சம்பவத்தை ராஜேஷ் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ராஜேஷை கைது செய்துள்ளனர். தீ வைக்கப்பட்ட லாட்டரி கடையில் இருந்து ஏராளமான லாட்டரி டிக்கெட்டுகள் தீயில் கருகியதோடு, ரூ.1.50 லட்சம் ரொக்கமும் நாசமானது.

லாட்டரி ஏஜென்சியில் இரண்டுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்ததால் தீ வைக்கப்பட்ட போது பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதவாறு தவிர்க்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் ராஜேஷ் எதற்காக லாட்டரி கடையில் தீ வைத்தார் என்ற காரணம் தெரியவில்லை. முன்னதாக ஃபேஸ்புக் நேரலையில் பேசியிருந்த ராஜேஷ், “எங்களுக்கு உண்மையான கம்யூனிசமே தேவை. EMS நம்பூதிரிபட் ஆட்சியின் போது இருந்த கம்யூனிசமே தேவை. மக்களுக்காக சேவை புரியக் கூடிய தோழர்களே தேவை” என பேசியிருந்ததாக போலீசார் கூறியிருக்கிறார்கள்.

Chella

Next Post

இளைஞர்களே..!! மாதந்தோறும் ரூ.2500 ஊக்கத்தொகை..!! முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Tue Mar 7 , 2023
வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார். 2023-24ஆம் ஆண்டுக்கான சத்தீஸ்கர் மாநில பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை முதல்வர் பூபேஷ் பாகேல் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பாக 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ஊக்கத் தொகை வழங்கப்படும் அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. […]

You May Like