சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நின்றிருந்த மேடை திடீரென சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பாமக சார்பில் கடந்த 2 நாட்களாக கொடியேற்று விழா நடைபெற்று வருகிறது.. இந்த விழாக்களில் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றிருந்தார்.. அந்த வகையில் சேலம் கிழக்கு மாவட்ட பாமக சார்பில், வாழப்பாடி பேருந்துநிலையம் பகுதியில் கொடியேற்று விழா நடைபெற்றது.. இதில் கலந்துகொள்ள அன்புமணி ராமதாஸ் வந்திருந்தார்..
இதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் அவர் ஏறிய போது மேடை திடீரென சரிந்து விழுந்தது.. எனினும் இதில் நல்வாய்ப்பாக அன்புமணி காயமின்றி தப்பினார்.. வேறு யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை.. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.. 10 பேர் மட்டுமே ஏறும் வகையில் அந்த மேடை அமைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அன்புமணியுடன் மேடையில் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரே நேரத்தில் அதிகமானோர் மேடையில் ஏறியதால் சுமை தாங்காமல் மேடை சரிந்ததாக கூறப்படுகிறது.. எனினும் அதனை பொருட்படுத்தாமல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் உரையாற்றி வருகிறார்.. மேடை சரிந்து விழுந்ததால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது..