fbpx

அதிரடியாக உயர்ந்தது ஆவின் நெய் விலை..!! அமலுக்கு வந்ததால் கடும் அதிர்ச்சி..!!

ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்ட நிலையில், புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த 9 மாதங்களில் மூன்றாவது முறையாக விலையேற்றப்பட்டுள்ளது சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்துவதாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 1 லிட்டர் ப்ரீமியம் நெய் ரூ.630-இல் இருந்து ரூ.680 ஆகவும், அரை லிட்டர் நெய் ரூ.340இல் இருந்து ரூ.365 ஆகவும் ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்க வருவதாக அனைத்து ஒன்றியங்களின் பொது மேலாளர்களுக்கும் நிர்வாக இயக்குனர் சுப்பையன் ஐஏஎஸ் சுற்றறிக்கை அனுப்பியிருந்த நிலையில், புதிய விலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதிரடியாக உயர்ந்தது ஆவின் நெய் விலை..!! அமலுக்கு வந்ததால் கடும் அதிர்ச்சி..!!

கடந்த 9 மாதங்களில் மூன்றாவது முறையாக ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஒரு லிட்டர் நெய் ரூ. 515இல் இருந்து ரூ.535 ஆகவும், ஜூலை மாதம் ரூ.535இல் இருந்து ரூ.580 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதன் முன்பாக கடந்த நவம்பர் மாதம் ஆவின் ஆரஞ்சு பால், ஜூலை மாதம் தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

ஐயப்ப பக்தருக்கு அடித்தது ஜாக்பாட்..!! தேடி அலையும் லாட்டரி கடைக்காரர்..!! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

Fri Dec 16 , 2022
தென்காசியை சேர்ந்தவருக்கு லாட்டரி சீட்டில் முதல் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்துள்ள நிலையில், பரிசை வென்ற ஐய்யப்ப பக்தரை கேரளா லாட்டரி கடை உரிமையாளர் தேடி வருகிறார். தமிழகத்தில் லாட்டரி சீட் விற்பனையானது தடை செய்யப்பட்டுள்ள சூழலில், கேரளாவில் லாட்டரி சீட் விற்பனையானது கேரளா அரசால் அங்கீகரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் கேரளாவுக்கு செல்லும்போது, அங்கு உள்ள லாட்டரி சீட்டுகளை வாங்குவது வழக்கம். அந்த […]
ஐயப்ப பக்தருக்கு அடித்தது ஜாக்பாட்..!! தேடி அலையும் லாட்டரி கடைக்காரர்..!! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

You May Like