fbpx

நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம் இதோ..!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுவது, நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் ஆசிய நாடுகளில் தான் அதிகளவு தங்கத்தை பயன்படுத்துகின்றனர். அதிலும், சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தங்கத்தின் இறக்குமதி அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில், கொரோனா பேரிடர் காரணமாக இந்த இரு நாடுகளிலும் தங்க இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் கொரோனா பரவலால் ஏற்பட்ட வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, ஊரடங்கு, சர்வதேச விமான தடை போன்ற நடவடிக்கைகளால் தங்கத்தின் விலையானது உயர்ந்து வருகிறது. அதே நேரம் பங்குச்சந்தை சரிவடைவதால் மக்கள் தங்கம் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.

நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம் இதோ..!

இந்நிலையில், இந்தியாவில் மத்திய அரசு, தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. இந்த இறக்குமதி வரி அதிகரித்த ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 வரை அதிகரித்தது. அதன் பிறகு மக்கள் எதிர்பார்த்த அளவு குறையவில்லை. சற்று ஏற்ற இறக்கத்தை தான் சந்தித்து வருகிறது. இருப்பினும் இம்மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையானது சவரனுக்கு 160 குறைந்தது. இதனால் நகை வாங்க மக்கள் சற்று ஆர்வம் காட்டினர். மேலும், அடுத்த நாளே தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்தது.

நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம் இதோ..!

இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.23 உயர்ந்து ரூ.4,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 காசுகள் உயர்ந்து ரூ.63.20-க்கும், ஒரு கிலோ 63,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இப்படி தங்கம் விலை உயர்வதால் சாதாரண மக்கள் முதல் நகை பிரியர்கள் வரை அனைவரும் நகைகள் வாங்க முடியாமல் திணறி வருகின்றனர்.

Chella

Next Post

விடுதி வார்டன் திட்டியதால் பிளஸ்1 மாணவி விபரீத முடிவு..! பூச்சிக் கொல்லி மருந்தை குடித்ததால் மருத்துவமனையில் அட்மிட்..!

Thu Aug 4 , 2022
விடுதி வார்டன் திட்டியதால், மனமுடைந்த பிளஸ்1 மாணவி பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பெரியசோரகை கிராமம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஒருவாரத்திற்கு முன்பு மாணவி உடல்நிலை சரியில்லை என்று கூறி விடுப்பு […]

You May Like