பள்ளிபாளையம் அருகே அடுத்தடுத்து 5 வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள், வீட்டில் பொருட்கள் இல்லாததால் சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த கணபதிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் நுழைந்த மர்மநபர்கள் 10 வீடுகளின் வெளிப்புற கதவுகளை பூட்டிவிட்டு, 5 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜான்சா என்பவர் வீட்டில் மட்டும் பொருட்களை எடுத்துச் சென்ற மர்மநபர்கள், மற்ற வீடுகளில் பொருட்கள் இல்லாததால், செல்லம்மாள் என்பவர் வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.