fbpx

வகுப்பறையில் வைத்து 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்..!! ரத்தம் வருவதை பார்த்து தாய் அதிர்ச்சி..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது குஞ்சூர். இந்த பகுதியில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 10 வயதே ஆன சிறுமி ஒருவர் படித்து வருகிறார். டிஸ்லெக்சியா எனப்படும் அதிகளவு எழுத்துப்பிழை மற்றும் சிரமப்பட்டு படிக்கும் குறைபாடு உடைய அந்த சிறுமி 2ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அந்த சிறுமி பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்தது முதல் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாயார் சிறுமியை பரிசோதித்துள்ளார். அப்போது, சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், சிறுமியை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, சிறுமியிடம் தாய் என்ன நடந்தது என கேட்டுள்ளார். அப்போதுதான் சிறுமியை அந்த சிறுமி படிக்கும் பள்ளியின் உரிமையாளரும், முதல்வருமான முதியவரே பலாத்காரம் செய்த சம்பவம் தெரியவந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை பள்ளியில் யாருமே இல்லாத வகுப்பறைக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்ற அந்த 65 வயதான பள்ளி உரிமையாளர், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றும் சொல்லி கேக் கொடுத்துள்ளார். தனது மகளுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து அங்குள்ள வர்தூர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்த பள்ளி முதல்வர் வேறு எந்த மாணவிகளையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாரா? என்பது குறித்து விசாரிக்கவும் பள்ளியின் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

2 சிறுவர்களுக்கு நேர்ந்த கொடூரம்..!! சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் பச்சை மிளகாய், ஊசி போட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

Sun Aug 6 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் திருட்டு சந்தேகத்தின் பேரில் அடையாளம் தெரியாத நபர்கள், 2 சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயை தேய்த்து, பலவந்தமாக ஊசிகளைச் செலுத்தியுள்ளனர். இந்தக் கொடுமைக்கு ஆளான சிறுவர்கள் இருவரும் 10 மற்றும் 15 வயதுடையவர்கள் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கண்டங்களையும் பெற்று வருகிறது. அந்த வீடியோவில், சிறுவர்களை பச்சை மிளகாயை சாப்பிட […]

You May Like