fbpx

‘இடி சத்தம் காதை அடைக்க கொட்டப்போகும் கனமழை’..!! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!

தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான செய்திக்குறிப்பில், “இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (நவ.3) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.4ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ.5ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chella

Next Post

வங்கி மோசடி!… ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், நரேஷ் கோயலுக்கு சொந்தமான ரூ.538 கோடி சொத்துகள் முடக்கம்!… அமலாக்கத்துறை அதிரடி!

Thu Nov 2 , 2023
ஜெட் ஏர்வேஸ் பண மோசடி வழக்கில் அதன் உரிமையாளர் நரேஷ் கோயல் மற்றும் குடும்பத்தினரின் ரூ.538 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கடந்த 2011 முதல் 2019ம் ஆண்டு வரை, கனரா வங்கியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் தொகை வழங்கப்பட்டது. இந்த கடன் தொகையை நிறுவனத்திற்கு செலவிடாமல், தனிப்பட்ட செலவுகளுக்காக பயன்படுத்தியதாக வங்கி சார்பில் அமலாக்கத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணை […]

You May Like