fbpx

மிரட்டல் பவுலிங்கால் பாகிஸ்தானை பந்தாடி ஆசியக் கோப்பையை தட்டிச் சென்றது இலங்கை அணி..!!

ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

15-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் 20 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டு வந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இந்த தொடரில், ஹாங்காங், வங்கதேசம் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறின. இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர்-4 (SUPER-4) சுற்றுடன் நடையைக் கட்டின. சூப்பர்-4 சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணியும், இரண்டில் வெற்றிகண்ட பாகிஸ்தான் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பவுலிங்கை தேர்வு செய்தது.

மிரட்டல் பவுலிங்கால் பாகிஸ்தானை பந்தாடி ஆசியக் கோப்பையை தட்டிச் சென்றது இலங்கை அணி..!!

இதையடுத்து, இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிஷங்கா மற்றும் குஷால் மெண்டிஸ் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய நசீம் ஷா, ஓப்பனர் குஷல் மெண்டிஸை டக் அவுட் ஆக்கி அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய தனஞ்செயா நிஷாங்காவுடன் இணைந்து ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அப்போது, ஹரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார் நிஷாங்கா. அடுத்து களமிறங்கிய குணதிலகாவுடன் இணைந்து தனஞ்செயா அதிரடியாக விளையாடத் துவங்கியதால் ஸ்கோர் உயரத் துவங்கியது. ஆனால், ஒரு ரன் எடுத்த நிலையில் பெவிலியனுக்கு குணதிலகா திரும்பவே ராஜபக்சவுடன் இணை சேர்ந்தார் தனஞ்செயா. ராஜபக்சேவுடன் இணைந்து பொறுப்பாக ஆடிவந்த தனஞ்செயா 28 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஷனகாவும் 2 ரன்களில் பெவிலியனுக்கு நடையைக் கட்ட 62 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை அணி.

மிரட்டல் பவுலிங்கால் பாகிஸ்தானை பந்தாடி ஆசியக் கோப்பையை தட்டிச் சென்றது இலங்கை அணி..!!

இதையடுத்து இணை சேர்ந்த ராஜபக்சே – ஹசரங்கா சரிவிலிருந்து அணியை வெற்றிகரமாக மீட்டனர். ஷப்தப் கான் வீசிய ஓவரில் இருவரும் தலா ஒரு பவுண்டரிகளை வீசி அசத்தினர். முகமது ஹஸ்னைன் வீசிய ஓவரில் ஹசரங்கா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார். இந்நிலையில் 36 ரன்கள் எடுத்த நிலையில், ஹசரங்கா தனது விக்கெட்டை பறிகொடுக்க, கருணாரத்னேவுடன் இணை சேர்ந்தார் ராஜபக்சே. நசீம் ஷா வீசிய ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்ஸரை விளாசி அசத்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ராஜபக்ச 35 பந்துகளை சந்தித்த நிலையில், அரைசதம் கடந்து அசத்தினார். இந்நிலையில், இலங்கை வீரர்கள் கொடுத்த இரு லட்டு போன்ற கேட்சுகளை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிடவே இலங்கை அணி மிக இலகுவாக 160 ரன்களை கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்களை குவித்தது இலங்கை அணி. ராஜபக்ச 45 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார். 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது பாகிஸ்தான் அணி.

மிரட்டல் பவுலிங்கால் பாகிஸ்தானை பந்தாடி ஆசியக் கோப்பையை தட்டிச் சென்றது இலங்கை அணி..!!

இதையடுத்து, ஓப்பனர்களாக ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கிய நிலையில், முதல் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது பாகிஸ்தான் அணி. முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது ஆகியோரின் அதிரடியால் பாகிஸ்தான் அணியின் கை ஓங்கியது. 2 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் என வலுவான நிலையில் இருந்தபோது, இஃப்திகார் அகமது 32 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியது. அரைசதத்தை கடந்த ரிஸ்வான், 55 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி 147 ரன்களில் ஆட்டமிழந்தது. பிரமோத் மதுஷன் 4 விக்கெட்களையும், ஹசரங்கா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்த இலங்கை அணி, 6ஆவது முறையாக ஆசியக் கோப்பையை வென்று அசத்தியது.

Chella

Next Post

அதிமுக தலைமை அலுவலக சாவி யாருக்கு? உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு..! ஈபிஎஸ் அதிரடி பதில்..!

Mon Sep 12 , 2022
அதிமுக தலைமை அலுவலக சாவி தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை […]
எம்ஜிஆர் சிலையிடம் ராஜினாமா கடிதம்..!! கதறி கதறி அழுத அதிமுக பிரமுகர்..!! என்ன காரணம்..?

You May Like