அமெரிக்காவில் மிசிசிபி மாகாணத்தில் புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்கடாக காட்சி அளித்தன. ஏராளமான மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல நகரங்கள் இருளில் மூழ்கியது. மேலும் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து தயாராக இருந்த மீட்பு குழுவினர் விரைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த புயலால் இதுவரை 26 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சிலர் மாயமானதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே, உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் பனிப்புயல் ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது பயங்கர புயல் வீசி பாதிப்பை ஏற்படுத்தி வருவது அங்குள்ள பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.