தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சேவையில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) வெளியிட்டுள்ளது. மூத்த ஆய்வாளர் பதவிகள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது.
பணியிட விவரம்:
மூத்த ஆய்வாளர் – 14
வயது வரம்பு: தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சேவையில் இருக்கும் இப்பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, 32 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிஎன்சி, பிசி, எம்பிசி பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி:
* மூத்த ஆய்வாளர் பதவிக்கு வேதியியல்/ உயிர் வேதியியல்/ உணவு தொழில்நுட்பம்/ உணவு மற்றும் மருந்துகள் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் மற்றும் 4 ஆண்டுகளுக்கு அனுபவம் தேவை. (அல்லது)
* வேதியியல்/ உயிர் வேதியியல்/ உணவு தொழில்நுட்பம்/ மைக்ரோபயோலஜி/ உணவு மற்றும் மருந்துகள் ஆகியவற்றில் முதுகலை பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.
சம்பளம்: இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.2,057,00 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கணினி வழியில் தேர்வு நடைபெறும். தமிழ் மொழி தகுதி தேர்வு கட்டாயமாகும். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு பணி நியமனம் வழங்கப்படும். நேர்காணல் கிடையாது.
விண்ணப்பிப்பது எப்படி? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.