கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மண்ணுஷியில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த மாணவன், 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவனின் நடவடிக்கையில் ஆசிரியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவன் சமீபத்திய தேர்வுகளில் மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். மேலும், சக மாணவர்களுடன் சரியாக பழகாமல் ஒதுங்கியே இருந்துள்ளார். இதையடுத்து, அந்த மாணவனுக்கு ஆசிரியர்கள் மனநல ஆலோசனை வழங்கியுள்ளனர். அப்போது ஆசிரியர் பலமுறை கேள்வி கேட்டாலும், மாணவன் முதலில் எதுவும் கூறவில்லை.
இந்நிலையில், இறுதியில் தன்னை டியூஷன் ஆசிரியை ஒருவர் மது கொடுத்து பலாத்காரம் செய்ததாக கவுன்சலிங் நடத்திய ஆசிரியரிடம் கூறியுள்ளான். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மண்டுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, டியூஷன் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதில், மாணவனுக்கு மது கொடுத்து பலாத்காரம் செய்ததை ஆசிரியை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.