fbpx

தொடரும் சோகம்…! சென்னையில் ராட்வைலர், பாக்ஸர் நாய்கள் கடித்ததில் சிறுவன் படுகாயம்..!

சென்னை கொளத்தூரில் 2 வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 12 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளான்.

சென்னை கொளத்தூர் லக்ஸ்மி நகர் பகுதியை அடுத்து இருக்கக்கூடிய டீச்சர்ஸ் காலனி பகுதியில், பிற்பகல் 2 மணியளவில், 12 வயது சிறுவன் வீட்டின் வெளியே வந்த போது, அருகில் உள்ள மற்றொரு வீட்டில் வளர்த்து கொண்டிருந்த வளர்ப்பு நாய்களான ராட்வைலர் மற்றும் பாக்ஸர் ஆகிய இரண்டு நாய்கள் சேர்ந்து சிறுவனை கடித்து குதறியது, நாய்களை கடித்து குதறியதால் அதிர்ச்சியில் சிறுவன் கூச்சலிட்டு கைத்தியதால், சிறுவனின் பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் சிறுவனை நாய்களிடம் இருந்து மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நாய்கள் கடித்து குதறியதில் 12 வயது சிறுவன் பலத்த காயமடைந்துள்ளான்.

ஏற்கனவே சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பூங்காவில் வளர்ப்பு நாய் கடித்ததில் 5 வயது சிறுமி பலத்த காயமடைந்திருந்ததார். அந்த சிறுமியி அப்போது கடித்ததும் ராட்வைலர் என நாய் தான், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, நாய் பூனை போன்ற பிராணிகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும், தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னயில் மீண்டும் அதே ராட்வைலர் இன நாயுடன் பாக்ஸர் இன நாயும் சேர்ந்து கடித்ததில் சிறுவனின் காத்து பகுதியில் அதிகளவு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் குழந்தைகளை நாய்கள் கடிப்பது தொடர் கதையாகி விட்டது.

English Summary

A 12-year-old boy was seriously injured after being bitten by 2 pet dogs in Kolathur, Chennai.

Kathir

Next Post

EXIT POLL 2024 RESULTS : மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு!!

Sat Jun 1 , 2024
English summary

You May Like