fbpx

கால்வாயில் சடலமாக கிடந்த தொழிலாளி..!! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

தருமபுரி மாவட்டம் மூக்காரெட்டிபட்டி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 22ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சண்முகம் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சண்முகத்தை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில், நந்தினி உறவினரான வினோத் என்பவரிடம் தனது கணவர் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது வாணியாறு கால்வாய் அருகே இருக்கும் தோட்டத்தில் தானும், சண்முகமும் அமர்ந்தும் மது குடித்ததாகவும், போதை அதிகமானதால் சண்முகம் அங்கேயே படுத்து விட்டதாகவும் வினோத் கூறியுள்ளார். ஆனால், அங்கும் சண்முகம் இல்லை. நேற்று வாணியாறு கால்வாய் பாலத்திற்கு அடியில் மர்மமான முறையில் சண்முகம் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சண்முகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

"அப்பா கூட சண்டை டா...."! இன்ஸ்டாகிராம் நபருக்கு போன் செய்த 10வயது சிறுமி! ஹோட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை!

Sun Mar 26 , 2023
குஜராத் மாநிலத்தில் சமூக வலைதளம் மூலமாக நண்பனான 22 வயது இளைஞன் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மார்ச் 20 ஆம் தேதி தனது தந்தையுடன் சண்டை போட்டு கோபித்துக் கொண்ட சிறுமி இந்த இளைஞனுக்கு போன் செய்திருக்கிறார். அந்த இளைஞன் வந்து சிறுமியை அழைத்துச் சென்று வேறொரு பெண்ணின் அடையாள அட்டையுடன் அவரை ஹோட்டலில் அறை எடுத்து தங்கச் செய்துள்ளார். […]

You May Like