fbpx

ஊழியரை காவு வாங்கிய உலகக்கோப்பை..!! சேப்பாக்கம் மைதானத்தில் ஒருவர் மரணம்..!! அதிர்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள்..!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இன்று அந்த மைதானத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளதால், அங்கு பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில், மைதானத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்த 52 வயது முருகன் என்ற ஊழியர் எதிர்பாராத விதமாக பணியில் இருந்த போது தவறி கீழே விழுந்தார்.

14 அடி உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்ததாகவும் கீழே விழுந்த ஒரு சில நொடிகளில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெல்டிங் மேற்பார்வையாளர் மகேந்திர பாபு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

14 அடி உயரத்தில் வெல்டிங் பணி நடந்து கொண்டிருக்கும் போது எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடு இன்றி பணி செய்ய வைத்தது குற்றம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நாளை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில், மைதானத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

செம ட்விஸ்ட்..!! பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் நபராக வெளியேறியது இந்த போட்டியாளரா..? யாருமே எதிர்பார்க்கலையே..!!

Sat Oct 7 , 2023
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக அறிமுகமானது. இந்நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து போட்டியாளர்கள் தமக்குள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். செருப்பால் அடிப்பேன், மூக்கு உடைந்திடும் என பல சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். இது தவிர ஜோவிகாவுக்கும் விசித்திராவுக்கும் இடையில் படிப்பு பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் முதல் வாரத்திலேயே இத்தனை பஞ்சாயத்தா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர். […]

You May Like