fbpx

” இந்திய இளைஞர்கள் மீது உலகமே நம்பிக்கை வைத்துள்ளது” சென்னையில் பிரதமர் மோடி உரை….

இந்திய இளைஞர்கள் மீது உலகமே நம்பிக்கை வைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 42-வது பட்டமளிப்பு இன்று நடைபெற்றது… இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், பட்டம் வழங்கினார்.. அனைவருக்கும் வணக்கம் என்று உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.. தொடர்ந்து பேசிய அவர் “ இளைஞர்களே எனது நம்பிக்கை என்று சுவாமி விவேகானந்தார் கூறியது இன்றைக்கும் பொருந்தும்.. இந்திய இளைஞர்கள் மீது உலகமே நம்பிக்கை வைத்துள்ளது..

கொரோனா தொற்று நூற்றாண்டுக்கு ஒரு முறை வரும் சோதனையாக அமைந்தது.. மருத்துவர்கள், விஞ்ஞானிகள் உள்பட அனைவரின் முயற்சியால் கொரோனாவில் இருந்து மீண்டோம்.. கடந்த ஆண்டில் இந்தியா, அன்னிய நேரடி முதலீடு 83 டாலராக அதிகரித்தது.. கடந்த ஆண்டில் இந்தியா உலகில் இரண்டாவது பெரிய செல்போன் தயாரிப்பாளராக இருந்தது.. தொழில்நுட்பம் பரவலாக்கப்பட்டு வருகிறது.. டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது.. உணவு பொருள் ஏற்றுமதியில் இந்தியா பங்காற்றுகிறது..

முந்தைய அரசு அனைத்திலும் கட்டுப்பாட்டை வைத்திருந்தது.. எங்கள் அரசு அதை மாற்றியது.. புதிய கல்வி கொள்கை மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் சுதந்திரத்தை இளைஞர்களுக்கு தருகிறது.. இளைஞர்களின் வெற்றி, இந்தியாவின் வெற்றியாக அமையும்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

’தமிழகத்தில் பாஜக எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்’..! பிரதமர் மோடி அறிவுரை..!

Fri Jul 29 , 2022
2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக எம்பிக்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற வேண்டும் என்று தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார். விழா முடிந்த பின்னர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு ஓய்வெடுக்கச் சென்றார். அப்போது அங்கு பாஜக நிர்வாகிகளுடன் […]
2024 நாடாளுமன்றத் தேர்தல்..!! தமிழகத்தில் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி..? எந்த தொகுதியில் தெரியுமா..?

You May Like