fbpx

போதை தலைக்கேறியதால் சிறுமியிடம் இளைஞர் செய்த தகாத காரியம்; அடித்து துவைத்த பொதுமக்கள்..!!

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிப்பவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் இரண்டு பேரும் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் நல்ல குடிபோதையில் இருந்தார். இந்நிலையில் அந்த இளைஞர் ரோட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த இளஞரை சரமாரியாக அடித்து துவைத்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராயப்புரம் காவல்துறையினர் இளைஞரை கைது செய்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அந்த போதை ஆசாமி ஒடிசா மாநிலம் துர்காப்பூரை சேர்ந்த சஞ்சய் பெகரா (23) என்பதும் குடிபோதையில் இருந்ததால் இதுபோல் நடந்தது கொண்டதாகவும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து சஞ்சய் பெகரா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Baskar

Next Post

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்..! முதல்வர் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

Tue Sep 20 , 2022
குஜராத் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பாஜக-வை எதிர்த்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் நேரடியாக போட்டியிடுகிறது. டெல்லியை அடுத்து பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி, பிற மாநிலங்களிலும் கால் பதிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் […]

You May Like