பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிப்பவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் இரண்டு பேரும் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் நல்ல குடிபோதையில் இருந்தார். இந்நிலையில் அந்த இளைஞர் ரோட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த இளஞரை சரமாரியாக அடித்து துவைத்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராயப்புரம் காவல்துறையினர் இளைஞரை கைது செய்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த போதை ஆசாமி ஒடிசா மாநிலம் துர்காப்பூரை சேர்ந்த சஞ்சய் பெகரா (23) என்பதும் குடிபோதையில் இருந்ததால் இதுபோல் நடந்தது கொண்டதாகவும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து சஞ்சய் பெகரா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.