மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் பகுதியைச் சேர்ந்த செல்லதுரை என்பவரின் மகன் கனகலட்சுமி (29) இவர் தன்னுடைய எதிர் வீட்டில் வசிக்கும் ஓட்டுனரான சக்திவேல்( 32) என்பவரை காதலித்து வந்தார்.இந்த நிலையில், கடந்த 2018 ஆம் வருடம் கடலூரில் இரண்டு பேரும் திருமணம் செய்து செய்து கொண்டனர். இருவரும் சேர்ந்து வாழ மணமகன் வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சென்ற ஐந்து வருடங்களாக இருவரும் எதிர், எதிர் வீட்டில் வசித்து வந்தனர். அதன் பிறகு தொடர்பாக கனகலட்சுமியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சக்திவேல் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இருவருக்கும் வரும் 20ஆம் தேதி முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தான், கனகலட்சுமி தந்தை வேலைக்காக வெளியே சென்று விட்டதால் கனகலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். இந்த நிலையில், மாலை வேலை முடிவடைந்து செல்லதுரை வீட்டிற்கு வந்து பார்த்தபோது கனகலட்சுமி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார். ஆனால் நேற்று மதியம் சக்திவேல் சில நபர்களுடன் கனகலட்சுமி வீட்டிற்கு வந்ததாகவும், கணவன் சக்திவேல் தன்னுடைய மகளை அடித்து கொலை செய்துவிட்டார் என்றும், தன்னுடைய மகள் இதுவரையில் இரண்டு முறை கருக்கலைப்பு செய்திருப்பதாகவும், உயிரிழந்த கனகலட்சுமி பெற்றோர் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக சக்திவேலின் குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதன் அடிப்படையில், காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்து கனகலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே இவர்களுக்கு பதிவு திருமணம் நடைபெற்று 7 வருடங்கள் முடிவடையாததால் இந்த சம்பவத்த தொடர்பாக சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.