திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி, அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், திடீரென தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதால் மாணவியை பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர். இதனைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மாணவியிடம் விசாரித்தபோது அதே கிராமத்தை சேர்ந்த ஜீவரத்தினம் (எ) ஜீவா (21) தான் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பதும் இதன் காரணமாக மாணவி கர்ப்பமானதாகவும் தெரியவந்தது.
மேலும், மாணவியுடன் ஜாலியாக இருப்பதை ஜீவரத்தினத்தின் நண்பர்கள் 2 பேர் புகைப்படம் எடுத்து வைத்ததாக தெரிவித்துள்ளனர். இதுசம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவரத்தினம் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சின்னராசு, சத்யா ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், மாணவியை கர்ப்பமாக்கிய ஜீவரத்தினத்தை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சின்ராசு, சத்யா ஆகியோரை தேடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.